படுகாயத்துடன் ஓடிவந்த பெண்... வீட்டுக்குள் குழந்தையை வைத்து தீவைத்த நபர் மாயம்: கனடாவில் ஒரு பரபரப்பு சம்பவம்
கனடாவில் பெண் ஒருவர் வீடு ஒன்றிலிருந்து படுகாயத்துடன் வெளியேறி பொலிசாரை அழைத்துள்ளார்.
பிரிட்டிஷ் கொலம்பியாவிலுள்ள Surreyயில் அமைந்துள்ள வீடு ஒன்றில், ஒரு ஆண் ஒரு பெண்ணைத் தாக்க, அந்த பெண் அவரிடமிருந்து தப்பி வீட்டை விட்டு வெளியே ஓடிவந்துவிட்டார்.
ஆனால், வீட்டுக்குள் குழந்தை ஒன்று சிக்கிக்கொண்டுள்ளது. அந்த பெண்ணைக் காயப்படுத்திய நபர், காரில் தப்பும்போது வீட்டுக்கு தீவைத்துவிட்டு ஓடிவிட்டார். அவர் அந்த பெண்ணுக்கு அறிமுகமானவர் என பொலிசார் தெரிவித்துள்ளார்கள்.
வீட்டில் பிடித்த தீயை அணைத்த பொலிசார், வீட்டுக்குள் சென்று பார்க்கும்போது, அந்த குழந்தை உயிரிழந்துவிட்டிருக்கிறது. இந்நிலையில், Fraser நதி மீதிருந்த பாலத்திலிருந்து ஒருவர் குதித்திருக்கிறார்.
அங்கே அந்த வீட்டைக் கொளுத்திய நபரின் கார் நின்றதால், அவர்தான் குதித்திருக்கிறார் என கருதப்படுகிறது.
அவரும் உயிரிழந்ததாக கருதப்படும் நிலையில், பொலிசார் அவரது உடலைத் தேடிவருகிறார்கள்.