கனடாவில் இணய வழியிலான துஷ்பிரயோக சம்பவங்கள் அதிகரிப்பு

Kamal
Report this article
கனடாவில் இணய வழியிலான சிறுவர் துஷ்பிரயோக சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறிப்பாக பிரிட்டிஷ் கொலம்பிய மாகாணத்தில் இவ்வாறு அதிக அளவு சிறுவர் துஷ்பிரயோக சம்பவங்கள் பதிவாகி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
கோவிட்-19 பெருந்தொற்றுக்கு பின்னர் நாட்டில் அதிக அளவான இணைய வழி சிறுவர் துஷ்பியோக சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பிள்ளைகள் அதிக நேரத்தை இணயத்தில் செலவிடுவதனால் இவ்வாறான பிரச்சனைகள் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
பிரிட்டிஷ் கொலம்பிய மாகாணத்தில் 2021 ஆம் ஆண்டு முதல் 2023 ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் இணைய வழியிலான சிறுவர் துப்பியோக குற்ற செயல்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்துள்ளது.
தற்காலத்தில் மிக சிறு வயதில் இருந்தே இணயம் பயன்படுத்தப்படுவதாகவும் இதனால் துஷ்பிரயோக சம்பவங்கள் இடம்பெறுவதற்கான சாத்தியங்களும் அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
பெற்றோர் இந்த விவகாரம் தொடர்பில் கூடுதல் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டியது அவசியம் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.