உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்ற இளம் தமிழக வீரரை நெகிழ வைத்த 10 வயது சிறுமி!
சிங்கப்பூரில் இடம்பெற்ற உலக செஸ் சாம்பியன் போட்டியில் 18 வயதான இளம் தமிழக வீரர் குகேஷ் சீன போட்டியாளரான லிங்கை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார்.
இதேவேளை, பிரதமர் நரேந்திர மோடி, ஜனாதிபதி திரௌபதி முர்மு, கூகுள் சி இ ஒ சுந்தர் பிச்சை, முன்னாள் சாம்பியன் கார்ல்சன் தொடங்கி உலக பணக்காரரான எலான் மஸ்க் வரை உலகம் முழுவதிலும் இருந்து அவருக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றனர்.
போட்டி முடிந்து ஊடகவியலாளர்கள் சந்திப்பில் குகேஷ் கலந்து கொண்டார். அப்போது 10 வயது நிரம்பாத சிங்கப்பூர் சிறுமி ஒருவர் குகேஷை நெருங்கினாள்.
தான் குகேஷின் தீவிர ரசிகை எனக்கூறியபடி தன் கைகளால் செய்யப்பட்ட தலையணை ஒன்றை அவரிடம் காண்பித்து 'ஆட்டோகிராப்' போடும்படி கேட்கிறார்.
சிறுமியின் அன்பை கண்டு பூரித்துபோன குகேஷ் பேரன்புடன் அதில் தனது ஆட்டோகிராப் போட்டு கொடுத்தார்.
இந்த வீடியோ காட்சி இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.