உச்சகட்ட பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகளில் சீன தலைநகரம்!
சீனாவில் தலைநகரான பெய்ஜிங்கில் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் தொடங்க இன்னும் சில தினங்களே உள்ளது. குறித்த மாநகரம் முழுவதும் உச்சகட்ட பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் இன்று (30-01-2022) சீனா முழுவதும் 54 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியானது. இதில் பெய்ஜிங்கில் மட்டும் 20 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இதேவேளை, இது கடந்த 2020 ஜூன் மாதத்தில் இருந்து தற்போதைய வரையிலான அதிகபட்ச கொரோனா பாதிப்பு என சீன தேசிய சுகாதார ஆணையம் அறிவித்துள்ளது.
இந்நிலையில், வீட்டு வளாகங்களை பூட்டுதல், எல்லைக் கட்டுப்பாடுகள் மற்றும் நீண்டகால தனிமைப்படுத்துதல் உள்ளிட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 20 இலட்சம் பேருக்கு உடனடியாக கொரோனா பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
மேலும், மூடப்பட்ட அரங்குகளில் குளிர்கால ஒலிம்பிக் போட்டி நடத்தப்படும் நிலையில், அந்த பகுதி முழுவதும் கடந்த 4 ஆம் திகதி சீல் வைக்கப்பட்டு மற்ற பகுதியில் இருந்து துண்டிக்கப்பட்டுள்ளது.