அமெரிக்காவில் சீன நிறுவனங்களின் தடை தொடருமா?
அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் அவ்வப்போது மோதல்போக்கு நீடித்து வண்ணம் உள்ளது. இதனையடுத்து தற்போது அமெரிக்க அதிபர் ஜோ பைடன் சீனாவுக்கு எதிராக நடவடிக்கை எடுத்துள்ளது வைரலாகி வருகிறது.
கடந்த டொனால்ட் டிரம்ப் ஆட்சியின்போது அமெரிக்காவில் சீனா செயலிகள் பல தடை செய்யப்பட்டன. இதன்காரணமாக பல சீன நிறுவனங்கள் பாதிப்படைந்தன. அமெரிக்க அரசு பாதுகாப்பு கருதி ஹேக்கிங் முறைகேட்டில் ஈடுபடும் சீன செயலிகள் அமெரிக்காவில் இயங்கத் தடை விதிக்கப்பட்டது.
இதனை முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்திருந்தார். இது சீனாவை அதிருப்தி அடைய செய்திருந்தது.அமெரிக்க பங்குச் சந்தையில் சீன நிறுவனங்கள் பல கடும் நஷ்டத்தை இதனால் சந்திக்க நேரிட்டது. டொனால்ட் டிரம்ப் 31 சீன பெருநிறுவனத்தின் பங்குகளை அமெரிக்க தொழிலதிபர்கள் வாங்கக்கூடாது எனத் தடை விதித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இதன்காரணமாக இந்த நிறுவனத்தின் பங்குகள் கடுமையான சரிவை முன்னதாக சந்தித்தன.
தற்போது முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப்பால் தடை செய்யப்பட்ட சீன நிறுவனங்கள் குறித்த விவரங்களை தற்போதைய அதிபர் ஜோ பைடன் மறுபரிசீலனை செய்யவுள்ளார்.சீனாவின் பெருநிறுவனங்களான சைனா மொபைல், ஹிக்விஷன், சைனா ரயில்வே கன்ஸ்டிரக்ஷன் கார்ப்பரேஷன் உள்ளிட்ட நிறுவனங்கள் டிரம்பின் உத்தரவால் கடுமையாக பாதிக்கப்பட்டன.
இதன்காரணமாக சீன முதலீட்டாளர்கள் மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் மேற்கண்ட நிறுவனங்கள்மீது முதலீடு செய்த பல முதலீட்டாளர்கள் பாதிப்படைந்தனர் என்று சீன வெளியுறவுத் துறை தெரிவித்திருந்தது. சீனாவின் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு அமைச்சரோடு தொடர்பில் இருக்கும் சீன நிறுவனங்களுக்குத் தடை விதிக்க ஜோ பைடன் முடிவெடுத்துள்ளார்.
ஜோ பைடனின் இந்த முடிவுக்கு குடியரசு கட்சியைச் சேர்ந்த செனடர்கள் டாம் காட்டன், மார்கோ ரூபி மற்றும் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த கேரி பீட்டர்ஸ், மார்க் கேள்வி ஆகியோர் ஆதரவு தெரிவித்துள்ளனர். அமெரிக்க வர்த்தகத் தளத்தை கண்காணிக்கும் சீன கம்யூனிச அரசுக்கு அமெரிக்க அரசு தக்க பதிலடி கொடுக்கவேண்டுமென அவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.