சீனாவில் உணவு கிடைக்காமல் பெரும் அவதிக்குள்ளான மக்கள்!
இரண்டு ஆண்டுகளாக உலகையே அச்சுறுத்தும் கொரோனா முதல் முறையாக சீனாவில் உகான் நகரில் கண்டறியப்பட்டது. அதன்பிறகு உலகம் முழுவதும் இந்த நோய் வேகமாக பரவி பலரின் உயிரை பறித்துள்ளது. தற்போது உருமாறிய கொரோனா வைரசான ஓமிக்ரோன் பொதுமக்களை மீண்டும் அச்சத்தில் வைத்துள்ளது.
இதேவேளை, சீனாவில் கடந்த 20 மாதங்களில் இல்லாத அளவு தற்போது மீண்டும் கொரோனா பாதிப்பு உயர்ந்து வருகின்றது. இதனால் சீனாவில் கட்டுப்பாடுகள் அதிகரித்து வருகின்றனர்.
சீனாவின் Shanxi மாகாணத்தின் தலைநகரான சியான் (Sian) உள்பட பல நகரங்களில் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேற தடை விதிக்கப்பட்டுள்ளது. பொது மக்கள் வீடுகளுக்குள்ளேயே இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
மூன்று நாட்களுக்கு ஒருமுறை வீட்டுக்கு ஒருவர் வெளியே வந்து அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடப்பதால் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். உணவு பொருட்களும் சரிவர கிடைக்காததால் அவர்கள் தவித்து வருகிறார்கள்.
இதுகுறித்து Sian மக்களில் ஒருவர் தெரிவித்தது, “நான் காம்பவுண்டு வீட்டில் வசித்து வருகிறேன். அவசரத்துக்கு கூட நூடுல்ஸ் கிடைக்கவில்லை. இப்படியே இருந்தால் பட்டினி கிடந்து சாவ வேண்டியது தான்” என்று தெரிவித்துள்ளார்.
இதே போல் இந்த நகரத்தைச் சேர்ந்த பொது மக்களும் நாங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.