அமெரிக்காவுக்கு சீனா விடுத்த கடும் எச்சரிக்கை!
சீனாவில் இடம்பெறவுள்ள ஒலிம்பிக்கில் விடயத்தில் தலையிடக்கூடாது என அமெரிக்காவுக்கு சீனா கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. தைவான் விவகாரத்தில் சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது.
இது சீனாவில் வரும் பிப்ரவரி 4 முதல் 20 ஆம் திகதி வரை நடைபெறும் குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் எதிரொலிக்கும் என்று சீனா கருதுகிறது. ஏற்கனவே சீனாவின் மனித உரிமை மீறல்களால் குளிர்கால ஒலிம்பிக்கிற்கு அதிகாரப்பூர்வ குழுவை அனுப்பப்போவதில்லை என அமெரிக்கா கடந்த மாதம் அறிவித்திருந்தது.
இந்த நிலையில் அமெரிக்க வெளியுறவு மந்திரி ஆண்டனி பிளிங்கனிடம் பேசிய சீன வெளியுறவு மந்திரி வாங் யி,
‘‘பீஜிங் ஒலிம்பிக் போட்டிகளை நடத்துவதில் அமெரிக்கா தலையிடுவதை நிறுத்த வேண்டும். தைவான் விவகாரத்தில் நெருப்புடன் விளையாடுவதை நிறுத்திக்கொள்ளுங்கள். சீனாவுக்கு எதிராக வட்டம் போடுவதை நிறுத்துங்கள்’’ என எச்சரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.