ஆஸ்திரேலியா கடலில் சீனாவின் உளவுத்துறை கப்பல்!
சீனாவின் உளவுத்துறை கப்பல் ஒன்று ஆஸ்திரேலியாவின் மேற்கு கடற்கரையில் ஒரு முக்கியமான பாதுகாப்பு வசதியிலிருந்து 50 கடல் மைல்களுக்குள் கண்காணிக்கப்பட்டதாக ஆஸ்திரேலியா வெள்ளிக்கிழமை கூறியது.
அந்த அவுஸ்திரேலியாவில் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், கடற்பிராந்தியத்தில் சீனாவின் நடத்தை சந்தேகத்தை எழுப்பியுள்ளது. இந்நிலையில் பிரதமர் ஸ்காட் மோரிசன் (Scott Morrison) , "இது ஒரு உளவுத்துறை கப்பல், அவர்கள் எங்களைப் பார்க்கிறார்கள், நாங்கள் அவர்களை உன்னிப்பாகக் கவனித்து வருகிறோம்," என்று அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.
ஆஸ்திரேலிய, அமெரிக்கா மற்றும் நேச நாட்டு நீர்மூழ்கிக் கப்பல்கள் பயன்படுத்தும் Exmouth இல் உள்ள Harold E Holt கடற்படை தகவல் தொடர்பு நிலையத்தை கடந்த ஒரு வாரமாக உளவு கப்பலை ஆஸ்திரேலியா கண்காணித்தது.
எனினும் ஆஸ்திரேலியாவில் உள்ள சீன தூதரகம் கருத்துக்கான கோரிக்கைக்கு உடனடியாக பதிலளிக்கவில்லை. அதேசமயம் ஆஸ்திரேலியாவில் மே 21 அன்று பொதுத் தேர்தல் நடைபெறவுள்ளது,
இந்நிலையில் சீனாவால் தேசிய பாதுகாப்பு அச்சுறுத்தல் குறித்த கேள்வி முக்கிய பிரச்சாரக் கருப்பொருளாக உள்ளது.
அதேசமயம் "இது ஒரு ஆக்கிரமிப்பு நடவடிக்கை என்று நான் நினைக்கிறேன். குறிப்பாக அது தெற்கே வந்துவிட்டது என்று நான் நினைக்கிறேன்," என்று பாதுகாப்பு அமைச்சர் பீட்டர் டட்டன் ( Peter Dutton) செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.
அத்துடன் "இது ஆஸ்திரேலியாவின் மேற்கு கடற்கரையில் இராணுவ மற்றும் உளவுத்துறை நிறுவல்களுக்கு அருகாமையில் உள்ளதாக தெரிவித்த அவர், ஆஸ்திரேலியா மற்றும் பசிபிக் பிராந்தியத்தில் சீனச் செல்வாக்கு உட்பட பல்வேறு விவகாரங்களில் சமீபத்திய ஆண்டுகளில் இரு முக்கிய வர்த்தகப் பங்காளிகளுக்கிடையேயான உறவுகள் சிதைந்துள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.
உள்துறை அமைச்சர் கரேன் ஆண்ட்ரூஸ் அதை தேர்தல் பிரச்சாரத்துடன் இணைக்க மறுத்துவிட்டார் .
அதேசமயம் எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சி, இது குறித்து அரசாங்கத்திடம் இருந்து ஒரு விளக்கத்தை கோருவதாகக் கூறியுள்ளது.