மரண படுக்கையில் சீன பத்திரிகையாளர் ! உடல்நிலை அபாயக் கட்டத்தில் உள்ளதாக தகவல்
வூஹான் நகரில் கொரோனா பரவலுக்கு எதிராக சீனா எடுத்த நடவடிக்கை குறித்து செய்தி சேகரித்த பத்திரிகையாளரின் உடல்நிலை அபாயக் கட்டத்தில் உள்ளதாக அவரின் குடும்பத்தார் தகவல் வெளியிட்டுள்ளனர்.
முன்னாள் வழக்கறிஞரான சாங் சான் (38), கடந்த 2020ஆம் ஆண்டு, பிப்ரவரி மாதம், கொரோனா குறித்து செய்தி சேகரிக்க பெருந்தொற்றின் மையப்பகுதியாக விளங்கிய வூஹான் நகருக்கு பயணம் மேற்கொண்டார்.
பெருந்தொற்று பரவலை சீன அரசு கையாண்ட விதம் குறித்து கேள்வி எழுப்பி வீடியோ பதிவு செய்தார்.
இது பிரச்சினையை தூண்டுவகதாகக் கூறி அந்தாண்டு மே மாதம் கைது செய்யபபட்டு நான்காண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டது.
இந்நிலையில் சாங் சானின் உடல்நிலை குறித்து அவரின் சகோதரர் சாங் ஜூ ட்விட்டர் பக்கத்தில், "நீண்ட நாள்களுக்கு அவர் வாழ மாட்டார். அவரை அவரே பார்த்து கொள்ள வேண்டும் என கூறியுள்ளேன். அவரின் மனதில், கடவுளும் நம்பிக்கையும் மட்டுமே உள்ளது. மற்ற எதை பற்றியும் அவர் கவலைப்படவில்லை" என பதிவிட்டுள்ளார்.
அவர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுவருதவாகவும் அவரை வற்புறுத்தி மூக்கு வழியாக உணவு அளிக்கப்பட்டு வருவதாக அவரின் வழக்கறிஞர் குழுவினர் தெரிவித்துள்ளனர்.
இருப்பினும், அவரின் தற்போதைய உடல்நிலை குறித்து விவரம் தெரியவில்லை என்றும் விளக்கம் அளித்துள்ளனர். இந்த பதிவு பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
மேலும் அவரின் சகோதரியை சீன அரசு உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என அம்னெஸ்டி அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து அம்னெஸ்டி பரப்புரையாளர் க்வென் லீ கூறுகையில், "உண்ணாவிரதத்தை அவர் உடனடியாக கைவிட வேண்டும் எனில், அவர் விடுதலை செய்யப்பட வேண்டும். அவருக்கு தேவையான மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட வேண்டும். சாங்கின் கைது மனித உரிமைக்கு எதிரான வெட்கக்கேடான தாக்குதல்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதையடுத்து, அவரது குடும்பத்தார் அவரைவிடுதலை செய்யப்பட வேண்டும் மனித உரிமை ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.