அவமானப்படும் தருணம்: பிரான்ஸ் தொடர்பில் போப் பிரான்சிஸ்
பாலியல் துஸ்பிரயோகத்தால் பாதிக்கப்பட்டவர்களின் பக்கம் கத்தோலிக்க தேவாலயங்கள் நிற்காததற்கு அவமானப்படுவதாக போப் பிரான்சிஸ் தெரிவித்துள்ளார்.
பிரான்ஸில் கத்தோலிக்க பாதிரியார்களால் சுமார் 3 லட்சத்துக்கும் அதிகமான குழந்தைகள் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகி இருப்பதாக சமீபத்தில் வெளியான விசாரணை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
கடந்த 70 வருடங்களுக்கும் மேலாக, இந்தப் பாலியல் துன்புறுத்தல்கள் பிரான்சில் நடந்து வந்திருக்கின்றன. மேலும் ரோமன் கத்தோலிக்க தேவாலயத்தைச் சேர்ந்த 3,000 பாதிரியார்களும், பிற ஊழியர்களும் இந்தப் பாலியல் வன்கொடுமைகளில் ஈடுபட்டுள்ளனர்.
1950ம் ஆண்டு முதல் இதுவரை 2 லட்சத்துக்கும் அதிகமான குழந்தைகள் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டனர் என்று குறித்த விசாரணை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள போப் பிரான்சிஸ், பாதிக்கப்பட்டவர்களுக்கு எனது வருத்தத்தைப் பகிர்ந்து கொள்கிறேன். தேவாலயத்தின் இயலாமைக்காகவும், பாதிக்கப்பட்டவர்களின் பக்கம் தேவாலயங்கள் நிற்காததற்கும்,
நீண்டகாலமாக, பாதிக்கப்பட்டவர்களைக் கவலையில் வைத்திருந்ததற்காகவும் நான் அவமானப்படுகிறேன். இது அவமானத்துக்கான தருணம் என்று தெரிவித்துள்ளார்.