நெட்டிசன்களை கதிகலங்க வைத்த காலநிலை ஆர்வலர் கிரெட்டா துன்பெர்க்
சுவீடன் காலநிலை ஆர்வலர் கிரெட்டா துன்பெர்க் காலநிலை மாற்றத்தின் முக்கிய பிரச்சினையை நோக்கி உலகின் கவனத்தை ஈர்க்கும் வகையில் வெளியிட்ட ஒரு கருத்து தற்போது ட்விட்டரை கலக்கி வருகிறது. கால நிலை மாற்றம் குறித்து அதிகம் பேசி வரும் இளம் காலநிலை ஆர்வலரான கிரெட்டா துன்பெர்க், சமூக ஊடக வலைத்தளங்களில் பெரும்பாலும் நகைச்சுவையான முறையில் கருத்துக்களை பதிவேற்றி வருகிறார்.
இந்நிலையில், அவர், காலநிலை மாற்றத்தால் ஏற்படும் ஒரு முக்கிய பாதிப்பு குறித்து தனது சமீபத்திய ட்வீட் மூலம் மீண்டும் நெட்டிசன்களை கவர்ந்துள்ளார். அதாவது துன்பெர்க் சமீபத்தில் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் ஒரு செய்தி கட்டுரையைப் பகிர்ந்துள்ளார்.
இந்த பதிவு கடந்த வியாழக்கிழமை அவரால் பகிரப்பட்டது மற்றும் 12 மணி நேரத்திற்குள் 2,40,000’க்கும் மேற்பட்ட லைக்குகளைப் பெற்றது. இந்த இடுகை அரை நாளுக்குள் இணைய தளத்தில் ட்ரெண்டாக மாறியதோடு ஆயிரக்கணக்கானோர் துன்பெர்க்கின் ட்வீட்டைப் பகிர்ந்து கொண்டனர்.
சுற்றுச்சூழல் விஞ்ஞானிகள் டாக்டர் ஷன்னா ஸ்வான் தனது புதிய புத்தகமான கவுண்டவுனில் நடத்திய ஆய்வு தொடர்பாக வெளியான கட்டுரையை கிரெட்டா துன்பெர்க் பகிர்ந்துள்ளார். “முதல் படி காலநிலை ஒரு நெருக்கடி போல் நடத்தத் தொடங்குவதோடு முழு விவகாரத்தையும் எடுக்க வேண்டும்.
இதை ஒரு முழுமையான பார்வையில் பார்க்க வேண்டும். மோசமான விளைவுகளை நாம் இன்னும் தவிர்க்கலாம் என்று அறிவியல் கூறுகிறது. எனவே இது சாத்தியம், ஆனால் இன்றும் நாம் தொடர்ந்தால் அது சாத்தியமில்லை.” என துன்பெர்க் தனது பதிவில் கூறியுள்ளார்.