கொலம்பிய ஜனாதிபதியின் ஹெலிக்கொப்டரை இலக்குவைத்து தாக்குதல்
கொலம்பிய ஜனாதிபதி Iván Duque பயணித்துக்கொண்டிருந்த ஹெலிகொப்டரை இலக்குவைத்து தாக்குதல் இடம்பெற்றுள்ளது.
இந்த சம்பவம் குறித்து ஜனாதிபதி இவான் டுக் கூறுகையில்,
நானும் அதிகாரிகளும் பயணித்துக்கொண்டிருந்த ஹெலிக்கொப்டரை இலக்குவைத்து துப்பாக்கி பிரயோகம் இடம்பெற்றது எனவும், வெனிசூலா எல்லையில் உள்ள கட்டடும்போ பிராந்தியத்தில் இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது. பாதுகாப்பு அமைச்சர் உள்துறை அமைச்சர் உட்பட அனைவரும் பாதுகாப்பாக உள்ளனர் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
மேலும் ஹெலிக்கொப்டரின் தொழில்நுட்ப திறன் காரணமாக உயிரிழப்புகள் தவிர்க்கப்பட்டன. அதுமட்டுமின்றி ஹெலிக்கொப்டரை துப்பாக்கி சன்னங்கள் துளைத்திருப்பதை காண்பிக்கும் வீடியோக்கள் வெளியாகியுள்ளன.
தாக்குதலிற்கு யார் காரணமாகயிருக்கலாம் என்ற விபரத்தை அதிகாரிகள் வெளியிடவில்லை எனினும் கிளர்ச்சிக்காரர்களின் அமைப்புகள் பல காணப்படும் பகுதியிலிருந்தே தாக்குதல் இடம்பெற்றுள்ளது.