73 வருடத்தில் மகாராணி மீது இளவரசர் பிலிப் கூறிய ஒரே ஒரு புகார்; என்ன தெரியுமா?
மறைந்த பிரித்தானிய இளவரசர் பிலிப் தனது மனைவி மீது கூறிய புகார் குறித்து பிலிப்பின் வாழ்க்கை வரலாற்றை எழுதும் Gyles Brandreth என்பவர் பகிர்ந்துள்ளார்.
கணவன்மார்களுக்கு தங்கள் மனைவி மீது புகார் இல்லை என்றாலும் ஏதாவது ஒரு குறை சொல்ல வேண்டும் என்ற காரணத்திற்காகக் கூட சில குறைகளைச் சொல்வது உண்டு.
அது சாதாரண குடும்பமாக இருந்தாலும் சரி, அரச குடும்பமாக இருந்தாலும் சரி விதிவிலக்கு இருக்காது. அந்த வகையில் இங்கிலாந்து மகாராணியாரின் கணவரான இளவரசர் பிலிப்புக்கு மனைவி மீது ஏதாவது புகார் உண்டா? அவர் அப்படி மனைவியைப் பற்றி ஏதாவது கூறியிருக்கிறாரா? என்பது குறித்து இளவரசர் பிலிப்பின் வாழ்க்கை வரலாற்றை எழுதும் Gyles Brandreth மனம் திறந்துள்ளார் .
ஒரு முறை என்ன இவர், எப்போது பார்த்தாலும் தொலைப்பேசியில் பேசிக்கொண்டே இருக்கிறார், அப்படி யாரிடம்தான் பேசிக்கொண்டிருக்கிறார்” என்று Gylesயிடம் கூறினாராம் இளவரசர் பிலிப்.
குதிரைப் பந்தயத்தில் ஆர்வமுடைய மகாராணியார், அவரது பந்தய மேலாளரிடம் தனது குதிரைகளைக் குறித்துத்தான் பேசியிருப்பார் என்றாராம் Gyles.
அது தவிர்த்து ஒருமுறை கூட மகாராணியாரைக் குறித்து அவரது கணவர் எந்த புகாரும் கூறியதில்லை என Gyles கூறியுள்ளார்.