இலங்கையில் குவிக்கப்பட்ட இராணுவம் தொடர்பில் கவலை !
நாட்டில் ஏற்பட்ட கலவரத்தை அடுத்து இராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளமை குறித்து கவலையடைவதாக அமெரிக்க இராஜாங்க திணைக்கள பேச்சாளர் நெட் பிரைஸ் (Ned Price) தெரிவித்துள்ளார்.
கடந்த சில நாட்களாக இலங்கையில் அதிகரித்து வரும் வன்முறைச் சம்பவங்கள் குறித்து அமெரிக்கா ஆழ்ந்த கவலையடைவதாகவும் அவர் (Ned Price) கூறினார்.
அத்துடன் அமைதியான போராட்டக்காரர்களுக்கு எதிரான வன்முறையை கண்டிப்பதாகவும் அவ்வாறு வன்முறையில் ஈடுபடுவர்களையும் அவர்களை தூண்டிவிடுபவர்களையும் கைது செய்ய வேண்டும் என்றும் அமெரிக்கா வலியறுத்தியுள்ளது.
மேலும் பிரதமர் இராஜினாமா செய்த பின்னர் இலங்கையில் நிலவும் அரசியல் நிலவரம் குறித்து உன்னிப்பாக அவதானித்து வருவதாகவும் அமெரிக்க இராஜாங்கத் திணைக்கள பேச்சாளர் (Ned Price) தெரிவித்துள்ளார்.
இலங்கையில் நீண்டகால பொருளாதார மற்றும் அரசியல் ஸ்திரத்தன்மையை அடைவதற்கான தீர்வுகளை கண்டறிந்து அதனை அமுல்படுத்துமாறும் அதற்காக ஒன்றிணைந்து செயற்படுமாறும் இலங்கை அரசியல் தலைவர்களை அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.