கனடாவில் கொரோனா தடுப்பூசி செலுத்திய 651 பேருக்கு பாதிப்பு; 99 பேரின் நிலை கவலைக்கிடம்
கனடாவில் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் நடந்து வருகின்றன. அதன்படி நேற்று வரை 12 லட்சத்து 11 ஆயிரத்து 617 பேருக்கு தடுப்பூசிகள் போடப்பட்டு உள்ளன.
எனினும், கொரோனாவுக்கான தடுப்பூசி போடப்பட்ட பின்னர் பலருக்கு பின்விளைவுகள் ஏற்படுகின்றதாக தெரிய வந்துள்ளதுடன் இதனால் சிலர் உயிரிழந்து உள்ளனர். அமெரிக்கா, இஸ்ரேல் உள்ளிட்ட பல்வேறு நாட்டினரும் கொரோனா தடுப்பூசிக்கு பின்னான விளைவுகளால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
இதில் மரணமடைந்தவர்களை பற்றி அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். இது தொடர்பில் கனடாவின் தலைமை பொது சுகாதார அதிகாரி தெரசா டாம் கூறுகையில், கொரோனா பாதிப்புகளுக்கு தடுப்பூசி போட்டு கொண்டவர்களில் 651 பேருக்கு வேறு வகையான விளைவுகள் ஏற்பட்டு உள்ளமை கண்டறியப்பட்டது.
அவர்களில் 99 பேருக்கு தீவிர பாதிப்புகள் ஏற்பட்டு ஆபத்து கட்டத்தில் உள்ளனர் எனவும் தெரிய வந்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.