ரொறன்ரோ, பீல் பிராந்தியத்தில் கொசுக்களால் புதிய சிக்கல்: பொதுமக்களுக்கு எச்சரிக்கை
ரொறன்ரோ மற்றும் பீல் பிராத்தியத்தில் கொசுக்களால் பரவும் மேற்கு நைல் வைரஸ் கண்டறியப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ரொறன்ரோவில் இருவேறு பகுதிகளில் மேற்கு நைல் வைரஸ் பாதிப்பை உருவாக்கும் கொசுக்களின் கூட்டத்தை கண்டறித்ததாக பொது சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ரொறன்ரோவில் மேற்கு நைல் வைரஸ் பரவும் வாய்ப்பு குறைவு என்றாலும், பொது மக்கள் எச்சரிக்கையுடன் செயல்பட அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
கொசுக்களால் மேற்கு நைல் வைரஸ் பரவும் என்பதால், கொசுக்களை ஈர்க்கும் கடுமையான வண்ணங்களில் உடை உடுத்த வேண்டாம் என கேட்டுக்கொண்டுள்ளனர்.
வைரஸ் பாதித்த கொசுக்கள் மனிதர்களை தாக்கினால், காய்ச்சல், தலைவலி, குமட்டல், வாந்தி, உடல் வலிகள், மற்றும் வீங்கிய நிணநீர் சுரப்பிகள் ஆகியவை அறிகுறிகளாக காணப்படும் என தெரிவித்துள்ளனர்.
இந்த ஆண்டு இதுவரை இந்த அறிகுறிகளுடன் யாரும் மருத்துவமனையை நாடியதில்லை எனவும் சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.