காங்கோவில் கிளர்ச்சியாளர்கள் நடத்திய தாக்குதலில் 57 பேர் பலி
மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோ குடியரசில் உள்நாட்டுப்போர் பல ஆண்டுகளாக நடைபெற்றுவருகிறது.
பல்வேறு தரப்பு கிளர்ச்சியாளர்கள் பிரிவுக்கும், அரசுப்படையினருக்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் நிலவி வருகிறது. இந்த மோதல்களின் போது கிளர்ச்சியாளர்கள் அவ்வப்போது அப்பாவி பொதுமக்கள் மீதும் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
இந்த தாக்குதலுக்கு அஞ்சி பலர் தங்கள் கிராமங்களை விட்டு வெளியேற்றி ஐ.நா. சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள முகாம்களில் தங்கியுள்ளனர். இந்நிலையில், அந்நாட்டின் இடுரீ மாகாணத்தில் உள்ள போஹா மற்றும் டிஷபி ஆகிய நகரிங்களுக்கு அருகே அமைந்துள்ள கிராமங்கள் மற்றும் முகாம்களில் ஏடிஎஃப் என்ற கிளர்ச்சிப்படையினர் அங்கிருந்த மக்கள் மீது கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூடு நடத்தினர்.
இந்த துப்பாக்கிச்சூட்டில் பொதுமக்கள் 57 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயம்டைந்தனர். 25 பேர் கிளர்ச்சியாளர்களால் கடத்திச்செல்லப்பட்டனர். மக்கள் தங்கியிருந்த முகாம்களுக்கு கிளர்ச்சியாளர்கள் தீ வைத்து சென்றனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற பாதுகாப்பு படையினர் தாக்குதல் நடத்திவிட்டு தப்பிச்சென்ற கிளர்ச்சியாளர்களை தேடும் பணியை தீவிரப்படுத்தியுள்ளனர்.