கனடாவில் ஓய்வு பெற்ற சாரதிகளை திரும்ப பணிக்கு அழைக்கவிருக்கும் TTC
தடுப்பூசி போட்டுக்கொள்ளாத சாரதிகள் இனி பணியாற்ற முடியாது என்ற சூழல் உருவாகும் நிலையில், ஓய்வு பெற்ற சாரதிகளை திரும்ப அழைக்கும் முடிவுக்கு TTC வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ரொறன்ரோவில் TTC ஊழியர்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ளும் காலக்கெடு அக்டோபர் 30ம் திகதியுடன் முடிவுக்கு வருகிறது. அக்டோபர் 30ம் திகதிக்கு முன்னர் அனைத்து TTC ஊழியர்களும் தங்கள் தடுப்பூசி சான்றிதழ்களை ஒப்படைக்க வேண்டும்.
மட்டுமின்றி ஊழியர்கள் தங்கள் வசதிக்கு தடுப்பூசி போட்டுக்கொள்ளும் வகையில் வேலை நேரத்தையும் மாற்றியமைத்திருந்தது TTC. இந்த நிலையிலேயே, ஓய்வு பெற்ற TTC ஊழியர்களை திரும்ப அழைக்க முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அக்டோபர் 8ம் திகதி வரையான தகவலின் அடிப்படையில் TTC ஊழியர்களில் 80% பேர்கள் தங்கள் தடுப்பூசி நிலையை வெளியிட்டுள்ளனர். இதில் பெரும்பாலானவர்கள் முழுமையாக தடுப்பூசி போட்டுகொண்டுள்ளதாகவும் எஞ்சியவர்கள் ஒரு டோஸ் போட்டுக்கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், காலக்கெடுவுக்கு பின்னர் தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்கள் மீது என்ன நடவடிக்கை என்பது தொடர்பில் இதுவரை TTC முடிவெடுக்கவில்லை என்றே தெரிய வந்துள்ளது.