கிரேன் சரிந்து விபத்து: கதறும் 23 வயது இளைஞரின் குடும்பம்
பிரிட்டிஷ் கொலம்பியாவின் கெலோவ்னா நகரில் கிரேன் சரிந்து விபத்தில் சிக்கி பலியான இளைஞர் தொடர்பில் அவரது குடும்பம் அதிர்ச்சியை வெளிப்படுத்தியுள்ளது.
திங்கட்கிழமை பகல் கடுமானப் பணியிடத்தில் கிரேன் ஒன்று சரிந்து விபத்துக்குள்ளானதில், தற்போது வரை ஐவரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளது.
25 மாடி கட்டிடம் ஒன்று கெலோவ்னா நகரில் உருவாகி வருகிறது. இதில் திங்களன்று பகல் சுமார் 10.45 மணியளவில் கிரேன் ஒன்று சரிந்து விபத்துக்குள்ளானது.
இதில், கட்டுமான பணியில் ஈடுபட்டு வந்த 23 வயது Cailen Vilness உள்ளிட்ட நால்வரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதுடன், அலுவல் பணியில் ஈடுபட்டிருந்த ஐந்தாவது நபரின் சடலமும் தற்போது மீட்கப்பட்டுள்ளது.
Cailen Vilness பணியாற்றிய பகுதியில் விபத்து ஏற்பட்டதாக தெரிய வந்ததும் தமது மகனை தொடர்பு கொள்ள முயன்றதாகவும் ஆனால், முடியாமல் போனதாக அவரது தந்தை Chris Vilness தெரிவித்துள்ளார்.
சுமார் ஓராண்டு காலமாக கட்டுமான நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார் Cailen Vilness. குடும்ப உறுப்பினர்களை சந்தித்துவிட்டு, பணிக்கு சென்ற முதல் நாளில் கிரேன் விபத்தில் சிக்கி Cailen Vilness மரணமடைந்துள்ளார்.
பல்கலைக்கழக படிப்பை பாதியில் விட்டுவிட்ட Cailen Vilness, தமது தந்தை மற்றும் சகோதரரின் வழியிலேயே கட்டுமான நிறுவனத்தில் பணிக்கு சேர்ந்துள்ளார்.
மட்டுமின்றி, தமக்கும் தமது வருங்கால மனைவிக்காகவும் புதிதாக வீடு ஒன்றையும் Cailen Vilness வாங்கியுள்ளார்.
ஆனால் தற்போது இரு குடும்பங்களை தவிக்க விட்டுவிட்டு சென்றுள்ளதாக Chris Vilness தெரிவித்துள்ளார்.