கொரோனா தடுப்பூசி மருந்துகளை விமானம் மூலம் வழங்க ஒப்பந்தம்
கொரோனா தடுப்பூசி மருந்துகள், அத்தியாவசிய மருந்துகள், மருத்துவ உபகரணங்கள் ஆகியவற்றை முன்னுரிமை அடிப்படையில் உலக நாடுகளுக்கு, 'சப்ளை' செய்யும் திட்டத்தை, ஐ.நா., குழந்தைகள் கல்வி நிதியம் அறிமுகப்படுத்தியுள்ளது. இதற்காக இந்த நிதியம், 'ஏர்பிரிட்ஜ் கார்கோ, ஏர் பிரான்ஸ், கொரியன் ஏர்' உள்ளிட்ட, 15 விமான நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்துள்ளது.
இந்த விமான நிறுவனங்கள், ஐ.நா.,வின், 'கோவேக்ஸ்' திட்டத்தின் கீழ், 145 நாடுகளுக்கு, முன்னுரிமை அடிப்படையில் கொரோனா தடுப்பூசி மருந்துகளை சப்ளை செய்ய ஒப்புதல் அளித்துள்ளன.அத்துடன், தடுப்பூசி மருந்தை பாதுகாப்பான தட்ப வெப்ப நிலையில் பராமரித்து, உலக நாடுகளுக்கு வினியோகம் செய்வதற்கான வசதிகளையும், விமானங்களில் செய்வதாக தெரிவித்துள்ளன. '
'ஏழை நாடுகளைச் சேர்ந்த மக்களுக்கு கொரோனா தடுப்பூசி மருந்து தடையின்றி உடனடியாக கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில், விமான நிறுவனங்களின் சேவைகளுக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது,'' என, ஐ.நா., குழந்தைகள் கல்வி நிதியத்தின் சப்ளை பிரிவு இயக்குனர், எடல்வா கடிலி தெரிவித்துள்ளார்.