ஊடகவியலாளரை திட்டிய அமெரிக்க ஜனாதிபதியால் சர்ச்சை
பண வீக்கம் குறித்து கேள்வி எழுப்பிய ஊடகவியலாளரை அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் ஒருமையில் திட்டியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. வெள்ளைமாளிகையில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் இன்று (25)செய்தியாளர்களை சந்தித்தார்.
ஊடகவியலாளர்களை சந்திப்பின் முடிவில் பைடனிடம் ஃபாக்ஸ் செய்தி நிறுவனத்தின் செய்தியாளர் பீட்டர் டூசி, நாட்டில் அதிகரித்து வரும் பண வீக்கம் தொடர்பாக கேள்வி எழுப்பினார்.
ஊடகவியலாளர்கள் சந்திப்பு முடிந்ததால் மைக் ஆஃப் செய்யப்பட்டிருக்கும் என நினைத்த ஜோ பைடன், அந்த செய்தியாளரை பார்த்து, அது மிகப்பெரிய சொத்து… அதிக பணவீக்கம்….
என்ன ஒரு முட்டாள்தனமான நபர்’ என கெட்டவார்த்தையால் திட்டினார். இது மைக்கில் பதிவானது. இதை கேட்ட ஊடகவியலாளர்கள் பெரும் அதிர்ச்சியடைந்தனர்.
செய்தியாளரை ஜோ பைடன் ஒருமையில் திட்டும் வீடியோ தற்போது சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.
இந்த சம்பவம் தொடர்பாக ஜோ பைடன் மன்னிப்பு கேட்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றனர்.