பிரித்தானியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 39,950 பேருக்கு கொரோனா பாதிப்பு!
பிரித்தானியாவில் கொரோனா தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் 39ஆயிரத்து 950பேர் பாதிக்கப்பட்டதோடு 19பேர் உயிரிழந்துள்ளனர்.
உலகளவில்கொரோனா தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட ஏழாவது நாடாக விளங்கும் பிரித்தானியாவில், இதுவரை மொத்தமாக 54இலட்சத்து 73ஆயிரத்து 477பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், ஒரு இலட்சத்து 28ஆயிரத்து 727பேர் உயிரிழந்துள்ளனர். தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட ஒன்பது இலட்சத்து 40ஆயிரத்து 285பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதில் 573பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
அத்துடன் இதுவரை வைரஸ் தொற்றிலிருந்து மொத்தமாக, 44இலட்சத்து நான்காயிரத்து 465பேர் பூரண குணமடைந்துள்ளனர்.