ஐரோப்பாவில் மேலும் 7 லட்சம் பேர் உயிரிழக்கும் அபாயம்! உலக சுகாதாரத்துறை அதிரடி அறிவிப்பு
ஐரோப்பாவில் கொரோனா தொற்றால் 7 லட்சம் பேர் உயிரிழக்கலாம் என்று உலக சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
கடந்த சில நாட்களாகவே பல்வேறு நாடுகளில் மீண்டும் கொரோனா வைரஸ் பெரும் உச்சத்தை அடைந்து வருகின்றது. அந்த வகையில் ஐரோப்பாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது.
தினமும் சுமார் 4,200 கொரோனாவால் உயிரிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. கடந்த மாதத்தை விட இரு மடங்காக பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. இந்த நிலைமை இப்படியே நீடித்தால் வருகின்ற மார்ச் மாதத்திற்குள் ஐரோப்பாவில் 7 லட்சம் பேர் வரை உயிரிழக்கும் அபாயம் இருப்பதாக உலக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
இதன் மூலம் அங்கு மொத்த பலி எண்ணிக்கை 20 லட்சத்தை கடந்து விடும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதுகுறித்து அமைப்பின் இயக்குனர் டாக்டர் க்ளூக் வெளியிட்டுள்ள அறிக்கையில் ஐரோப்பா மற்றும் மத்திய ஆசியா பகுதிகளில் கொரோனாவின் இன்றைய நிலவரம் மிகவும் மோசமாக உள்ளது.
எனவே நோய் எதிர்ப்பு திறன் குறைந்தவர்கள், மூத்த குடிமக்கள் மற்றும் சுகாதார பணியாளர்கள் போன்ற பாதுகாப்பு அச்சுறுத்தல் மிகுந்தவர்களுக்கு பூஸ்டர் டோஸ் போட வேண்டும் எனவும் அவர் அறிவுறுத்தி உள்ளார்.