இத்தாலியை விடாது துரத்தும் கொரோனா; லட்சத்தை நெருங்கும் பலி எண்ணிக்கை
இத்தாலியில் கொரோனா தொற்றால் பலியானோர் எண்ணிக்கை ஒரு லட்சத்தை நெருங்குகிறதாக என தகவல்கள் தெரிவிக்கின்றன.
சீனாவில் ஆரம்பமான கொரோனா வைரஸின் தாக்கம் உலகம் முழுவதும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் கொரோனா தொற்றால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கையில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. அமெரிக்காவை தொடர்ந்து இந்தியா இரண்டாம் இடத்திலும், பிரேசில் 3ம் இடத்திலும் உள்ளது. உலக அளவில் கொரோனா பாதிப்பு அதிகமுள்ள பட்டியலில் இத்தாலி 8ம் இடத்தில் உள்ளது.
இந்நிலையில், இத்தாலி நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 17 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் அங்கு பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 29 லட்சத்து 55 ஆயிரத்து 434 ஆக உள்ளது. அத்துடன் ஒரே நாளில் 343 பேர் உயிரிழந்துள்ள நிலையில், கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 98 ஆயிரத்து 288 ஆக உள்ளது.
மேலும், கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 24.26 லட்சத்தை கடந்துள்ளதுடன் சுமார் 4.30 லட்சத்துக்கும் அதிகமானோர் சிகிச்சை பெற்று வருகின்றதாகவும் கூறப்படுகின்றது.