ரஷ்யாவை மிரட்டும் கொரோனா தொற்று! ஒரே நாளில் 1,211 பேர் உயிரிழப்பு.. வெளியான முக்கிய தகவல்
ரஷ்யாவில் கொரோனா தொற்றால் கடந்த 24 மணி நேரத்தில் 1,211 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது.
கொரோனா வைரஸ் உலக நாடுகள் முழுவதும் ஆட்டி படைத்து வருகின்றது. அந்த வகையில் குறிப்பாக அமெரிக்கா, பிரிட்டன், இந்தியா போன்ற நாடுகளில் கொரோனா தீவிரமாக தாக்கி வருகின்றது.
இதற்கிடையில் பெரும்பாலான உலக நாடுகளில் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் மும்முரமாக நடைபெறுகிறது. இருப்பினும் கொரோனா பரவல் குறைந்தபாடில்லை. ரஷ்யாவில் கடந்த சில நாட்களாகவே கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
தலைநகர் மாஸ்கோ உள்ளிட்ட இடங்களில், நோய் பாதிப்பு அதிகரித்து காணப்படுகிறது. ரஷ்யாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 38 ஆயிரத்து 420 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.
இதன் மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 91 லட்சத்து 9 ஆயிரத்து 94 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா தொற்றுக்கு ஒரே நாளில் மேலும் 1,211 பேர் உயிரிழந்துள்ளதால் பலி எண்ணிக்கை 2 லட்சத்து 56 ஆயிரத்து 597 ஆக உயர்ந்துள்ளது.