கனடா வெளியுறவுத்துறை அமைச்சரையும் விட்டுவைக்காத கொரோனா
கனடாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் மெலனி ஜோலி (Mélanie Joly) கொரோனா தொற்றிற்குள்ளாகியுள்ளார்.
கொரோனாவின் திரிபான ஓமைக்ரோன் மாறுபாடு கனடா முழுவதும் அதிவேகமாக பரவுகின்ற நிலையில் covid-19 வைரஸ் தொற்றும் அதிகரித்து வருகின்றன.
இந்நிலையில் விரைவான ஆன்டிஜன் பரிசோதனை செய்த வெளியுறவு துறை அமைச்சர் மெலனி ஜோலி (Mélanie Joly) நேர்மறையான முடிவுகளை பெற்றதாக ட்விட்டரில் தெரிவித்தார்.
ஆன்டிஜன் பரிசோதனையில் covid-19 வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டதால் PCR பரிசோதனையின் முடிவுகள் வரும்வரை எப்போதும் இருந்ததைப் போலவே கிட்டத்தட்ட எனது பணியை தொடர்வேன் என்று அமைச்சர் மெலனி ஜோலி கூறினார்.
தற்பொழுது பொது சுகாதார நடவடிக்கைகளை பின்பற்றி தனிமைப் படுத்திக் கொண்டிருக்கிறேன் என்று தெரிவித்துள்ளார். 42 வயது நிறைந்த அமைச்சர் மெலனி covid-19 வைரஸ் தொற்றுக்கு எதிரான தடுப்பூசி மருந்து பாதுகாப்பானதாக இருப்பதால் மக்கள் அனைவரும் தடுப்பு ஊசி மருந்தினை தவறாமல் போட்டுக்கொள்ள வேண்டும் என்று ஊக்கமளித்தார்.
கனடா முழுவதும் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட covid-19 வைரஸ் தொற்று சம்பவங்கள் பதிவாகியதால் மெலனி ஜோலி (Mélanie Joly) இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
அதேவேளை அச்சுறுத்தும் ஓமைக்காரன் மாறுபாட்டினால் கனடாவில் பல்வேறு சுகாதார கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.