பிரான்சில் கொரோனா பாதிப்பு; 40 லட்சத்தை தாண்டியது
பிரான்சில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 25,229 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 40 லட்சத்தை தாண்டியுள்ளது.
உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா தொற்று அமெரிக்கா, இங்கிலாந்து, இத்தாலி உள்ளிட்ட சில நாடுகளில் மிக மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தி உள்ளது. பிரான்ஸ் நாட்டில் தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை சற்று குறைவாக பதிவாகி வந்த நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் தொற்று உறுதியானவர்களின் எண்ணிக்கை 25,229 ஆக பதிவாகி உள்ளது. இதன்மூலம் பிரான்ஸ் நாட்டில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 40,15,560 ஆக உயர்ந்துள்ளதுடன் கொரோனாவால் பலியானோர் மொத்த எண்ணிக்கை 90,146 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 2,71,678 பேர் குணமடைந்துள்ளதுடன் தற்போது 36,53,736 பேர் சிகிச்சை பெற்று வருவதாகவும் அந்நாட்டு சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
இதேவேளை உலக அளவில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் பட்டியலில் பிரான்ஸ் தற்போது 6-வது இடத்தில் உள்ளது.