ரஷ்யாவில் மோசமாகும் நிலைமை.. ஒரே நாளில் 33,558 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
ரஷ்யாவில் கொரோனா வைரஸ் தொற்றால் ஒரே நாளில் புதிதாக 33,558 பாதிக்கப்பட்டுள்ளதாக அதிர்ச்சிகர தகவல்கள் வெளியாகியுள்ளது.
உலக நாடுகளில் கொரோனா வைரஸ் கோரத்தாண்டவம் ஆடி வருகின்றது. முதலில் சீனாவில் தொடங்கி நாளடைவில் உலகம் முழுவதும் பரவியது.
இந்நிலையில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பில் முதலிடத்தில் அமெரிக்காவும், இரண்டாம் இடத்தில் இந்தியாவும், மூன்றாவது இடத்தில் பிரேசிலும் உள்ளன. இதுவரை உலக அளவில் 25.93 கோடிக்கும் அதிகமானோர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
வைரஸ் தொற்றுக்கு இதுவரை 51.87 லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் வரிசையில் தற்போது ரஷ்யா 5வது இடத்தில் உள்ளது.
ரஷ்யா நாட்டின் சுகாதாரத்துறை சார்பில் இன்று வெளியான அறிக்கையில் கூறியதாவது, கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 33,558 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதன்மூலம் ரஷ்யாவில் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தற்போது 94,34,393 ஆக உயர்ந்துள்ளது. தொற்றால் பலியானவர்களின் எண்ணிக்கை 2,67,819 ஆக அதிகரித்துள்ளது.