பிரித்தானியாவில் வளர்ப்பு நாய்க்கு கொரோனா தொற்று
பிரித்தானியாவில் வளர்ப்பு நாய்க்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக இங்கிலாந்தின் தலைமை கால்நடை அதிகாரி தெரிவித்துள்ளார்.
கடந்த 3 ஆம் திகதி வெய்பிரிட்ஜில் உள்ள விலங்குகள் மற்றும் தாவர சுகாதார குழுவின் ஆய்வகத்தில் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளைத் தொடர்ந்து அந்த வளர்ப்பு நாய்க்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அந்த நாய் இப்போது வீட்டில் வைத்து சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக நாயின் உரிமையாளர் கொரோனா தோற்றால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது அவரிடமிருந்து தொற்று நாய்க்கு பரவியிருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
பிரித்தானியாவின் சுகாதார பாதுகாப்பு நிறுவனத்தின் தொற்றுநோயியல் ஆலோசகர் டாக்டர் கேத்ரின் ரஸ்ஸல், கொரோனா ஒருவரிடமிருந்து மற்றவருக்குப் பரவுகிறது, தற்போது மக்களிடமிருந்து விலங்குகளுக்கும் பரவுகிறது.
இதனால் வளர்ப்பு பிராணிகள் வளர்ப்போர், பொது சுகாதார வழிகாட்டுதலின்படி, செல்லப்பிராணிளைத் தொடுவதற்கு முன்னும் பின்னும் கை கால்களை கழுவ வேண்டும். மேலும், கொரோனா தொற்றின் போது தங்கள் விலங்குகளை எவ்வாறு பராமரிப்பது என்பது குறித்த அரசின் வழிகாட்டுதல்களைப் பின்பற்ற வேண்டும்.