கனடா மாகாணம் ஒன்றில் திடீரென அதிகரிக்கும் கொரோனா தொற்று! மக்களே அவதானம்
ஒன்ராறியோவில் நேற்று கொரோனா தொற்றினால் 15 பேர் உயிரிழந்திருப்பதுடன், புதிதாக 1 299 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த மாத நடுப்பகுதிக்குப் பின்னர், அதிகளவு தொற்றாளர்கள் நேற்று கண்டறியப்பட்டுள்ளனர்.
வீடுகளில் தங்கும் உத்தரவில், இருந்து ஒன்ராறியோ வெளியேறி வரும் நிலையிலேயே அதிகளவு தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். ரொறன்ரோவில் 329 பேரும், பீல் பிராந்தியத்தில் 192 பேரும், யோர்க் பகுதியில் 116 பேருரும் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். இந்த அனைத்துப் பகுதிகளிலும் சனிக்கிழமையை விட நேற்று தொற்றாளர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் ஒன்ராறியோவில் 46,586 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டதில், 3.1 வீதமானோருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.