இலங்கையில் தொடர்ந்து உயரும் கொரோனா தொற்றாளர்கள் எண்ணிக்கை!
இலங்கையில், கொரோனா தொற்றுக்கு உள்ளானோர் எண்ணிக்கை 3 இலட்சத்தைக் கடந்துள்ளது.
இன்று புதன்கிழமை மாலை இனங்காணப்பட்ட 1380 தொற்றாளர்களுடன் மொத்த தொற்றாளர் எண்ணிக்கை 301 272 ஆக உயர்வடைந்துள்ளது.
இவ்வாறு இனங்காணப்பட்ட தொற்றாளர்களில் 271 855 பேர் குணமடைந்துள்ளதோடு , 25 222 தொற்றாளர்கள் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இவ்வாறான நிலையில் விரும்பியோ விரும்பாமலோ மேலும் ஓரிரு வருடங்கள் கொரோனா தொற்றுடன் வாழ வேண்டியுள்ளதால், தடுப்பூசியைப் பெற்றுக் கொள்வதோடு அடிப்படை சுகாதார விதிமுறைகளை முறையாக பின்பற்ற வேண்டும் என்று சுகாதார அமைச்சு வலியுறுத்தியுள்ளது.