பிரேசிலில் உக்கிரமடையும் கொரோனா; ஒரே நாளில் 3,600 பேர் பலி
உலகை அச்சுறுத்தும் கொரோனாவால் பிரேசிலில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 3,600 பேர் பலியானதுடன் 82,558 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன . இந்நிலையில் உலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 12.66 கோடியாக உயர்ந்துள்ளது.
கடந்த 2019ம் ஆண்டு இறுதியில் சீனாவின் உகான் நகரில் கண்டறியப்பட்ட கொரோனா தொடர்ந்து உலகம் முழுவதும் பரவி வருகிறது. தொற்று பரவலைக் கட்டுப்படுத்த தடுப்பூசி போடும் பணி மும்முரமாக நடைபெற்று வருகின்றபோதும் 2வது, 3வது அலைகளாக பரவும் கொரோனா கடுமையான பாதிப்பை தொடர்ந்து ஏற்படுத்தி வருகிறது.
உலக அளவில் தற்போதைய நிலவரப்படி கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 12.66 கோடியாக உயர்ந்துள்ளது. உயிரிழந்தோர் எண்ணிக்கை 2 கோடியே 77 லட்சத்து 8 ஆயிரத்து 819 ஆக உயர்ந்துள்ளது.
அதேபோல குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 10 கோடியே 21 லட்சத்து 42 ஆயிரத்து 761 ஆக உள்ளது.
கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள நாடுகள் பட்டியலில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்திலும் , பிரேசில் 2ம் இடத்திலும் இந்தியா 3ம் இடத்திலும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.