கனடாவில் கொரோனா நிலவரம்; ஒரே நாளில் 4,600 பேருக்கு பாதிப்பு ; 39 பேர் பலி
கனடாவில் கொரோனா தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் 4,600பேர் பாதிக்கப்பட்டதோடு 39பேர் உயிரிழந்துள்ளனர்.
உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 27ஆவது நாடாக விளங்கும் கனடாவில் இதுவரை மொத்தமாக 15இலட்சத்து 98ஆயிரத்து 800பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன் , 27ஆயிரத்து 620பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். தற்போதுவரை தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள 45ஆயிரத்து 024பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் அவர்களில், 638பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
மேலும் இதுவரை 15இலட்சத்து 26ஆயிரத்து 156பேர் தொற்றிலிருந்து பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.