கனடாவில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா பரவல்!
நாட்டில் குளிர்ச்சியான காலநிலை, கட்டுப்பாடுகளில் தளர்வு ஆகியவற்றால் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருவதாக கனடா தலைமை சுகாதார அதிகாரி தெரசா டாம் (Theresa Tam) தகவல் வெளியிட்டுள்ளார்.
இதேவேளை சுமார் 3.81 கோடி மக்கள் தொகையை கொண்ட நாடான கனடாவில் கடந்த இரு வார காலமாக கொரோனா தொற்று பரவல் அதிகரித்து காணப்படுவதாக தெரியவந்துள்ளது.
மேலும் கனடாவில் கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் இந்த ஒரு வாரமாக கொரோனா தொற்று பாதிப்பு 11 சதவீதமாக அதிகரித்துள்ளது. நாட்டில் ஒரு நாளில் சராசரியாக 2,500 பேர் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இதேவேளை நாளாந்தம் 1,800 பேர் சிகிச்சைக்கு அனுமதிக்கப்படுகின்றனர். கனடாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு 545 பேர் தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளதாக தெரியவந்துள்ளது.
இந்நிலையில் கனடா தலைமை சுகாதார அதிகாரி தெரசா டாம் (Theresa Tam) மேற்கண்ட விடயத்தை தெரிவித்துள்ளார்.