மீண்டும் சீனாவை ஆட்டம்காண வைக்கும் கொரோனா; ஒரே நாளில் இவ்வளவு பேருக்கு பாதிப்பா?
கடந்த 2019- ஆம் ஆண்டு கொரோனா சீனாவின் உகான் நகரில் தோன்றி உலக நாடுகளை உலுக்கியிருந்தபோதும், சீனா மிகச்சிறப்பாக கையாண்டு கொரொனா வைரஸ் பரவலை கட்டுக்குள் வைத்தது.
பூஜ்ஜிய கொரோனா கொள்கை என கடைபிடித்து ஒரு சிலருக்கு தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டாலும் ஒட்டு மொத்த நகரத்தையும் ஊரடங்குக்குள் கொண்டு வந்து சீனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்தி வருகிறது.
இந்த நிலையில் , கடந்த சில வாரங்களாக அந்நாட்டில் தொற்று பரவல் கட்டுக்கடங்காமல் பரவுகிறது. ஒமைக்ரான் வகை கொரோனா சீனாவின் 12 க்கும் மேற்பட்ட மாகாணங்களில் பரவியுள்ளதனால், ஒரே நாளில் 13,146- பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதில், 1,455 பேருக்கு அறிகுறிகளுடன் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 11,691 அறிகுறிகள் இன்றி கொரோனா உறுதியாகியுள்ளது.
மேலும் கொரோனா பரவல் காரணமாக சீனாவின் நிதி நகரமான ஷாங்காய் முழுவதும் கடுமையான ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதனால் அங்குள்ள 2.5 கோடி பேர் வீடுகளில் முடங்கியுள்ளனர்.