இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி! ஆஸ்திரேலியா ஆய்வில் தகவல்
இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்தி கொண்டவர்கள் கொரோனாவால் உயிரிழப்பு நேரும் வாய்ப்பு 16 மடங்கு குறைவு என ஆஸ்திரேலியா ஆய்வில் வெளியாகியுள்ளது.
கடந்த ஆண்டு சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் வேகமாக பரவி வருகின்றது.
இந்நிலையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட ஒரு லட்ச பேரில் தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் செலுத்தி கொண்டவர்களில் ஒருவர் மட்டுமே நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழப்பை சந்திப்பதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் ஆஸ்திரேலியாவில் நடந்த ஆய்வில் இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்தி கொண்டவர்கள் கொரோனாவால் உயிரிழப்பு நேரும் வாய்ப்பு 16 மடங்கு குறைவு என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியா நாட்டில் தற்போது ஃபைஸர், மாடர்னா போன்ற நிறுவனங்களின் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றது.
அதேபோல் அமெரிக்காவின் டெக்சாஸ் நகரில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் தடுப்பூசி செலுத்தியவர்களுடன் ஒப்பிடும் போது செலுத்தாதவர்கள் 20 மடங்கு கொரோனா ஆபத்தில் சிக்க வாய்ப்புள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.