இலங்கையில் பள்ளி மாணவர்களுக்கு கொரோனா தடுப்பூசி
பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கையில் அக்டோபர் 1ம் தேதி முதல் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளது.
எனினும் மக்கள் பொது இடங்களில் கூட்டமாகக் கூடவும், பூங்காக்கள், திரையரங்குகள், உணவு விடுதிகள் உள்ளிட்டவைகளுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.
இந்நிலையில் பள்ளி மாணவா்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என அரசு அறிவித்துள்ளது.
இதுகுறித்து சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், அக்டோபர் 21ம் தேதி முதல் 18 மற்றும் 19 வயதுடைய மாணவர்களுக்கு பைசர் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் 20 வயது நிறைவடைந்தவர்களில் 82 சதவிகித பேருக்கு முதல் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டுவிட்டதாகவும் தெரிவித்துள்ளது.