அரியவகை மரத்திலிருந்து தயாராகும் கொரோனா தடுப்பூசி
அமெரிக்கா நிறுவனம் ஒன்று அறியகை மரத்திலிருந்து கொரோனாவுக்கான தடுப்பூசியை தயாரித்து வருவதாக தெரிவித்துள்ளன.
அமெரிக்காவின் நோவாவாக்ஸ் தடுப்பூசி நிறுவனம் தான் இந்த தாயரில் ஈடுபட்டு வருகிறது. அதற்காக இந்த நிறுவனம் சிலி நாட்டின் குயிலே என்ற அறிய வகை மரத்தை தான் சார்ந்துள்ளது. சிலியின் பூர்வகுடி மக்களான மாபுக்கே(Mapuche) இனத்தை சேர்ந்த மக்கள் இந்த மரத்தில் இருந்து தான் சோப்பு மற்றும் அவர்களுக்கு தேவையான மருந்துகளை தயாரிப்பதாக கூறப்படுகிறது.
ஏனெனில் இந்த மரத்தில் அந்த அளவிற்கு மருத்துவ குணங்கள் நிறைந்திருப்பதாக தெரியவந்துள்ளது.
இந்த நிலையில் மரத்தின் இலைகளைக் கொண்டு குறைந்த விலையிலான தடுப்பூசி தயாரித்து ஏழை நடக்குகளுக்கு விற்பனை செய்ய நோவாவாக்ஸ் நிறுவனம் தீர்மானித்துள்ளது.
முன்னதாக இந்த மரத்தின் பட்டைகளில் இருந்தும் மலேரியா நோய்க்கான தடுப்பூசி தயாரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.