பிரான்சில் மீண்டும் வேகமெடுக்கும் கொரோனா வைரஸ்! ஒரே நாளில் 6 ஆயிரத்தை தாண்டிய பாதிப்புகள்
பிரான்ஸ் நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 6,765 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
உலகையே ஆட்டிப்படைத்து வரும் கொரோனா வைரஸ் புதுப்புது அவதாரம் எடுத்து மக்களை பயங்கரமாக வேட்டையாடி வருகிறது. உலக அளவில் கொரோனா அதிகம் பாதித்த நாடுகளில் பிரான்ஸ் 7வது இடத்தை பிடித்துள்ளது.
இந்நிலையில் பிரான்ஸ் நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 6 ஆயிரத்து 765 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.
இதையடுத்து அங்கு கொரோனா வைரசால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை தற்போது 70 லட்சத்து 2 ஆயிரத்து 393 ஆக உயர்ந்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் 60 பேர் உயிரிழந்துள்ள நிலையில் அங்கு கொரோனா வைரசுக்கு பலியானோர் மொத்த எண்ணிக்கை 1,16,615 ஆக உயர்ந்துள்ளது. மேலும் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 67,50,301 ஆக உயர்ந்துள்ளது.
இதனிடையே பிரான்ஸ் நாட்டில் வரும் அக்டோபர் மாதம் 15 ஆம் திகதி முதல் கொரோனா பரிசோதனைகள் இலவசமாக செய்யப்படாது என்றும் அதற்கான கட்டணம் வசூலிக்கப்படும் என்றும் அந்நாட்டு பிரதமர் ஜீன் காஸ்டெக்ஸ் தெரிவித்துள்ளார்.