பிரித்தானியாவில் தொடர்ந்து அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு!
பிரித்தானியாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் கொரோனாவால் (Covid-19) 38,263 பேர் பாதிக்கப்பட்டதோடு 201 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிரித்தானியாவில் இதுவரை மொத்தமாக 96 இலட்சத்து 75 ஆயிரத்து 058 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 1 இலட்சத்து 43 ஆயிரத்து 360 பேர் மரணமடைந்துள்ளனர்.
பிரித்தானியாவில் தற்போது வரை Covid-19 தொற்றினால் பாதிக்கப்பட்டு 15 இலட்சத்து 87ஆயிரத்து 711 பேர் அங்குள்ள வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதேவேளை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு 938 பேர் தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளதாக தெரியவந்துள்ளது.
பிரித்தானியாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் 40, 569 பேர் குணமடைந்துள்ள நிலையில், இதுவரையில் வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 79 இலட்சத்து 43 ஆயிரத்து 987 ஆக உயர்ந்துள்ளது.