மன்னர் சார்லசின் முடிசூட்டு விழா; புதிய பியர் அறிமுகம்!
இங்கிலாந்து நாட்டின் புதிய மன்னராக 3ஆம் சார்லஸ் அரியணை ஏறிய நிலையில், அடுத்த மாதம் (மே ) 6ஆம் திகதி மன்னர் சார்லசின் முடிசூட்டு விழா பிரமாண்டமாக நடைபெறும் என பக்கிங்காம் அரண்மனை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
இந்த விழாவின் போது பாரம்பரிய மரபுப்படி மன்னர் சார்லஸ் கையில் செங்கோல், தடி ஆகியவற்றை ஏந்தி அரியணையில் அமர்வார். இந்த விழாவில் உலகம் முழுவதும் இருந்து 2,000 முக்கிய பிரபலங்கள் பங்கேற்கிறார்கள்.
இந்த நிலையில் சார்லசின் முடிசூட்டு விழாவை கொண்டாடும் வகையில் இங்கிலாந்தில் உள்ள பிரபல மதுபான ஆலையான விண்ட்சர்-ஈடன் ப்ரூவரி சார்பில் புதிய பியர் தயாரிக்கப்பட்டுள்ளது.
‘ரிட்டர்ன் ஆப் தி கிங்’ என அழைக்கப்படும் இந்த புதிய பியர் மன்னர் சார்லசின் வாழ்நாள் சேவையை வெளிப்படுத்தும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளதாக மதுபான ஆலையின் தலைவரும், இணை நிறுவனருமான வில்கால்வர்ட் தெரிவித்துள்ளார்.