பிரான்சில் கிறிஸ்துமஸ் சந்தைகளை இலக்கு வைத்து போலி யூரோ தாள்கள்: விடுக்கட்ட எச்சரிக்கை
பிரான்சில் கிறிஸ்துமஸ் சந்தைகளை இலக்கு வைத்து போலி யூரோ தாள்கள் புழக்கத்தில் விடப்பட்டுள்ளதாக காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்கும் படி அறிவுறுத்தியுள்ளனர். குறிப்பாக தென்கிழக்கு பிராந்தியங்களை இலக்கு வைத்து இந்த போலி தாள்கள் பரவுவதாகவும், 20, 50 மற்றும் 100 யூரோ தாள்கள் புழக்கத்தில் விடப்பட்டுள்ளதாகவும் எச்சரித்துள்ளனர்.
நீஸ் நகரில் கடந்த வாரங்களில் இவ்வகை போலி தாள்கள் கண்டறியப்பட்டதாகவும், போலி தாள் ஒன்றை வைத்திருப்பதினால் மூன்று ஆண்டுகள் சிறையும், 75,000 யூரோக்கள் பிழையும் விதிக்கப்படும் என காவல்துறையினர் எச்சரித்துள்ளனர்.
கடந்த மாதத்தில் 130,000 யூரோக்கள் பெறுமதியான போலி தாள்கள் கண்டறியப்பட்டுள்ளதாக நீஸ் மாவட்ட காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர். மோசடியில் ஈடுபட்ட 10 பேர் வரை கைது செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிறிஸ்துமஸ் தற்காலிக சந்தைகளை இலக்கு வைத்து இந்த போலி தாள்கள் மோசடி இடம்பெறுகின்றாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் இது தொடர்பாக விழிப்புடன் இருக்கும்படியும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.