இத்தாலி அரசின் அறிவிப்பால் நாடு முழுவதும் வலுக்கும் ஆர்ப்பாட்டம்!

Sulokshi
Report this article
இத்தாலியில் பணியிடங்களில் ஹெல்த் பாஸ் கட்டாயம் என அறிவிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் நாடு முழுவதும் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதன்போது பாராளுமன்றம் நோக்கி பேரணி சென்ற பொதுமக்களை பொலிசார் கண்ணீர் புகைக்குண்டுகளை வீசி விரட்டி அடித்தனர்.
இத்தாலியின் ரோம் நகரில் கொரோனா தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக பணியிடங்களில் கொரோனா ஹெல்த் பாஸ் திட்டம் அமல்படுத்தப்பட்டது. இதற்காக கொரோனா தடுப்பூசி சான்றிதழ், கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டதற்கான ஆதாரம் அல்லது சமீபத்திய கொரோனா பரிசோதனை முடிவை வழங்க வேண்டும்.
கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு, நோய் எதிர்ப்பு சக்தி இருப்பதை உறுதி செய்யும் என்பதால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. முதலில், முன்களப் பணியாளர்களுக்கு மட்டும் என அறிவிக்கப்பட்ட இந்த திட்டமானது தற்போது வருகின்ற 15ம் தேதி முதல் அனைத்து பணியிடங்களில் கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் ஹெல்த் பாஸ் இல்லாத தொழிலாளர்கள் ஊதியம் இல்லாமல் சஸ்பெண்ட் செய்யப்படுவார்கள் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது. இத்தாலி அரசின் இந்த திடீர் அறிவிப்புக்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ள நிலையில், ரோம் நகரில் ஆயிரக்கணக்கானோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அதோடு , பொலிசாரின் அறிவுறுத்தல் மற்றும் எச்சரிக்கையை மீறி ஒரு குழுவினர் பாராளுமன்றம் நோக்கி பேரணி சென்றவர்களை பொலிசார் விரட்டி அடித்ததால் அப்பகுதியே போர்க்களம் போல் காட்சியளித்தது.
இந்த மோதல்களின் போது பல போராட்டக்காரர்கள் கைது செய்யப்பட்டுள்ளதகவும் கூறப்படுகின்றது.