அத்துமீறிப் பறந்த சீனாவின் 38 படை விமானங்களால் பீதியில் உறைந்த நாடு!
சீனாவின் 38 படை விமானங்கள் தங்கள் வான் பாதுகாப்பு மண்டலத்தில், அத்துமீறிப் பறந்ததால் தாம் அதிர்ந்துபோனதாக தைவான் குற்றம் சுமத்தியுள்ளது . அத்துட்ச்ன் இதுவரை சீனா மேற்கொண்டவற்றிலேயே மிகப்பெரிய ஊடுவல் இது என்றும் தைவான் குறிப்பிட்டுள்ளது தைவான்.
கடந்த வெள்ளியன்று அணு ஆயுதங்களை ஏவும் திறன் கொண்ட விமானங்கள் உள்ளிட்ட சீனப் பாதுகாப்புப் படை விமானங்கள் தைவான் வான் பாதுகாப்பு அடையாள மண்டலத்தில் (ADIZ) இரு அலைகளாக பறந்ததாக அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சகம் கூறியுள்ளது.
இந்நிலையில் சீனா தொடர்ந்து படை ஆக்கிரமிப்புகளில் ஈடுபடுவது, அப்பிராந்தியத்தின் அமைதியை குலைக்கிறது என தைவானின் பிரீமியர் சு ட்செங் சங் சனிக்கிழமை செய்தியாளர்களிடம் கூறினார்.
எனினும் இந்த சம்பவம் தொடர்பாக சீனா இதுவரை பொதுவெளியில் எதையும் கூறவில்லை சீன ராணுவத்தின் 25 விமானங்கள், பகல் நேரத்தில் தைவானின் ப்ராடாஸ் தீவின் பவளப்பாறை பகுதிக்கு அருகில், தென் மேற்கு வான் பாதுகாப்பு எல்லை பகுதிக்குள் நுழைந்ததாக, தைவானின் பாதுகாப்பு அமைச்சக செய்தியறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து 13 சீன ராணுவ விமானங்கள் அதே பகுதியில் வெள்ளிக்கிழமை மாலை பிலிப்பைன்ஸ் மற்றும் தைவானுக்கு நடுவில் பறந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.