கோவாக்சின் தடுப்பூசி செலுத்தி கொண்டவர்கள் கனடாவுக்கு செல்ல அனுமதி! வெளியான முக்கிய தகவல்
கனடாவில் கோவாக்சின் தடுப்பூசி செலுத்தி கொண்டவர்கள் தாராளமாக தங்களது நாட்டிற்கு வரலாம் என்று அனுமதி வழங்கியுள்ளது.
சீனாவில் கடந்த ஆண்டு தோன்றிய கொரோனா வைரஸ் இன்று வரை உலக நாடுகள் முழுவதும் தீவிரமாக பரவி வருகின்றது. இதனால் தடுப்பூசி செலுத்தும் பணியை அனைத்து உலக நாடுகளும் மும்முரமாக செயல்படுத்தி வருகின்றனர்.
அதன்படி இந்தியாவிலுள்ள பொதுமக்களுக்கு கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு போன்ற தடுப்பூசிகள் கொரோனாவிற்கு எதிராக செலுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் இந்தியாவில் கொரோனாவுக்கு எதிராக பொதுமக்களுக்கு செலுத்தப்படும் கோவாக்சின் தடுப்பூசியினை கடந்த சில நாட்களுக்கு முன்பாக தான் உலக சுகாதார அமைப்பு அங்கீகரித்துள்ளது.
இவ்வாறான சூழ்நிலையில் கனடா அரசாங்கம் முக்கிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது வருகின்ற 30 ஆம் திகதியில் இருந்து இந்தியாவில் கொரோனாவுக்கு எதிராக தயாரிக்கப்படும் கோவாக்சின் தடுப்பூசியினை முழுமையாகப் பெற்றுக் கொண்ட நபர்கள் தங்கள் நாட்டிற்குள் தாராளமாக நுழையலாம் என்று அறிவிப்பை வெளியிட்டுள்ளது.