கோவிட் காரணமாக கனடாவில் இத்தனை பேர் பலியாகியுள்ளனரா?
கோவிட்19 பெருந்தொற்று காரணமாக கனடாவில் சுமார் ஐம்பதாயிரம் பேர் வரையில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பெருந்தொற்று ஆரம்பிக்கப்பட்டு மூன்றாண்டு காலப் பகுதியில் இவ்வாறு ஐம்பதாயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர்.
கனேடிய பொதுச் சுகாதார அலுவலகம் இந்த விடயத்தை தெரிவித்துள்ளது.
கியூபெக் மாகாணத்தில் 17865 பேரும், ஒன்றாரியோ மாகாணத்தில் 15786 பேரும் உயிரிழந்துள்ளனர்.
அதிக எண்ணிக்கையிலானவர்கள் உயிரிழந்த மாகாணங்களின் வரிசையில் கியூபெக், ஒன்றாரியோ மற்றும் அல்பர்ட்ட ஆகிய மாகாணங்கள் முதல் மூன்று இடங்களையும் வகிக்கின்றன.
கோவிட் தடுப்பூசிகள், நோய் தடுப்பு முறைமைகள் போன்ற பல்வேறு விடயங்கள் காணப்பட்ட நிலையில் இன்னமும் கனடாவில் நாளாந்தம் சராசரியாக 40 பேர் கோவிட் தொற்று தாக்கத்தினால் மரணிப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
தற்பொழுது நாட்டில் ஒமிக்ரோன் திரிபு மற்றும் அதன் உப திரிபுகளினால் அதிகளவு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
உலக அளவில் கோவிட் காரணமாக நேரடியாகவும் மறைமுகமாகவும் சுமார் 14.9 மில்லியன் மரணங்கள் பதிவாகியுள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.