இரண்டாண்டுகளுக்கு பின் முதல் தொற்றைப் பதிவு செய்த தீவு தேசம்
கொரோனா பரவல் தொடங்கிய இரண்டாண்டுகளுக்குப் பின்னர் தற்போது முதல் முறையாக குக் தீவுகளில் கொரோனா தொற்று பதிவாகியுள்ளது.
தி குக் ஐலாண்ட்ஸ் எனும் தீவு தேசத்தின் மொத்த மக்கள் தொகையே வெறும் 17,000 தான். குறித்த நாட்டில் 96% மக்கள் இரண்டு டோஸ் தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர்.
இந்த நிலையில் முதன் முறையாக 10 வயது சிறுவன் ஒருவருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. நியூசிலாந்து நாட்டில் இருந்து அகதிகளுக்கான விமானத்தின் தனது குடும்பத்துடன் அந்த சிறுவன் கடந்த டிசம்பர் .2ம் திகதி குக் தீவுகளுக்கு வந்துள்ளார்.
அப்போது மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனையில் அவருக்கு தொற்று இருந்தது உறுதியாகியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பில் அந்த நாட்டின் பிரதமர் மார்க் பிரவுன் கூறுகையில்,
நாங்கள் எங்கள் நாட்டின் எல்லைகளை திறப்பது குறித்து ஆலோசித்துக் கொண்டிருந்தோம். ஆனால், தற்போது எல்லையின் வழியாக இந்த தொற்றாளர் வந்துள்ளார். இது உண்மையில் சோதனையான காலம் என குறிப்பிட்டுள்ளார்.