சர்வதேச விமான பயணிகளுக்கு நிம்மதி: முக்கிய முடிவெடுத்த அமெரிக்கா
அமெரிக்கா செல்லும் சர்வதேச விமான பயணிகள் இனி கொரோனா சோதனை முன்னெடுத்ததற்கான ஆவணங்களை சமர்ப்பிக்க தேவையில்லை என ஜோ பைடன் நிர்வாகம் அறிவித்துள்ளது.
குறித்த புதிய விதியானது உல்ளூர் நேரப்படி ஞாயிறு 12.01 முதல் அமுலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விமான சேவை நிறுவனங்கள் உட்பட முக்கிய தொழிற் அமைப்புகள் தொடர்ந்து வலியுறுத்திய நிலையிலேயே ஜோ பைடன் நிர்வாகம் இந்த முடிவுக்கு வந்துள்ளதாக தெரிய வந்துள்ளது.
ஆனால் அமெரிக்காவின் CDC அமைப்பு இந்த முடிவை 90 நாட்களுக்கு கண்காணிக்கும் எனவும், அதிகாரிகள் தரப்பு குறிப்பிட்டுள்ளனர். தற்போதைய சூழலில் விமான பயணத்திற்கு முன்னர் கொரோனா சோதனை முன்னெடுக்க வேண்டிய தேவை இல்லை எனவும், அதனாலையே குறித்த கட்டுப்பாடுகளை ரத்து செய்ததாகவும் CDC சுட்டிக்காட்டியுள்ளது.
மேலும், 90 நாட்கள் கண்காணிக்கப்படும் எனவும், தேவை ஏற்படும் என்றால் மீண்டும் அமுலுக்கு கொண்டுவரப்படும் என CDC அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளது.