இனி குளிரூட்டும் வசதி தேவையில்லை! புதிய கொரோனா தடுப்பூசி கண்டுபிடிப்பு
அமெரிக்காவில் குளிர்பதன பெட்டியில் வைக்க தேவையில்லாத புதிய கொரோனா தடுப்பூசி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்கா- பாஸ்டன் நகரில் உள்ள குழந்தைகள் ஆஸ்பத்திரியை சேர்ந்த ஆராய்ச்சி குழுவினர் இந்த தடுப்பூசியை உருவாக்கியுள்ளனர்.
இந்த தடுப்பூசி வைரசின் முனைப்பகுதியில் உள்ள புரோட்டினை கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
குறித்த தடுப்பூசி அறை வெப்பநிலையிலேயே 7 நாட்கள்வரை வைத்திருந்து இதை பயன்படுத்தலாம். அதுவரை சீராகவும், செயல்திறன் மிக்கதாகவும் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து இந்த தொழில்நுட்பத்துக்கு காப்புரிமை கோரி விஞ்ஞானிகள் விண்ணப்பித்துள்ளனர்.
மேலும் குறித்த தடுப்பூசி கொரோனாவை உருவாக்கும் சார்ஸ் வைரஸ் மற்றும் அதன் உருமாறிய ரகங்களுக்கு எதிராக சிறப்பான நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.