அமெரிக்கா - ஈரான் இடையே இழுபறியால் மசகு எண்ணெய் விலை அதிகரிப்பு
ஹோர்முஸ் நீரிணை விவகாரத்தில் அமெரிக்கா - ஈரான் இடையே இழுபறியால் சர்வதேச சந்தையில் மீண்டும் மசகு எண்ணெய் விலை அதிகரித்துள்ளது.
ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பதற்காக ஈரான் விதித்த நிபந்தனைகளுக்குப் பதிலாக, கடந்தகால போர்கள், தாக்குதல்கள் மற்றும் போராட்டங்களால் ஏற்பட்ட உயிரிழப்புகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கோரியுள்ளார்.

இதன் காரணமாக இரு நாடுகளுக்கும் இடையிலான மோதல் உச்சமடைந்துள்ள நிலையில், இன்று சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலை அதிகரித்துள்ளது.
நேற்று மசகு எண்ணெய் விலை 5 சதவீதம் வரை அதிகரித்ததைத் தொடர்ந்து, பிரெண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்று 88 டொலராகவும், WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்று 82.45 டொலராகவும் அதிகரித்துள்ளதாக தெரிவிகப்பட்டுள்ளது.